மனிதனாகப்
பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே,
உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.
உதவி செய்யாமல்
சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள்
வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை.
எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக்
கொடுத்து உதவ வேண்டும்
உதவி செய்யும் போது அந்த உதவியை
உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று
சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும்
வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள்.
மற்றவர்க்கு செய்யும் சிறு தொண்டு
கஷ்டத்தை போக்கும் மருந்துப் பொருள்,
மகிழ்ச்சியை உண்டாக்கும் மாணிக்கப் பொருள்.
வாழ்கையில் கற்றுக்கொள்ளும் நற்பண்பும் கூட....
முதுமைக்கு உதவி கைத்தடி
முயற்சிக்கு உதவி தன்னம்பிக்கை
தன்னம்பிக்கைக்கு உதவி நேர்மறை எண்ணம்
நேர்மறை எண்ணத்துக்கு உதவி அன்பு,,,,,,,
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
இறைவா,,!!! உண்டு விட்டு உனக்கு நன்றி சொல்வதை விட பசித்திருந்தும் உன்னளவில் பொறுமை கொள்ளும் போதுதான் என் மனம் ஆனந்தம் அடைகின்றது....
இறைவா,!! சிலர் உப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! சிலர் ஒப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! சிலர் தப்புக்கு நட்புக்கொள்கிறார்கள்.
இறைவா,!! என்னை உன்னளவில் நட்புக் கொள்ள அருள்புரிவாயாக.
என்றும் உன் அடியான்.!!!
அஹமட் யஹ்யா,ஆனைவுழுந்தான்,ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.....