சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம் .. சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்
Monday, December 17, 2012
அதாவது, உலோக இனத்தைவிட தாவர இனம் சிறந்தது. தாவர இனத்தைவிட, அனைத்து உயிரினங்களும் சிறந்தவை. அனைத்து உயிரினங்களை விட, அல்லாஹ் மனிதர்களை மிக உயர்வாகவும், மிகச் சிறப்பாகவும் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட உயர்வுக்கு ஏற்றபடி மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிக்கும் நல்லறிவையும், ஆற்றலையும், ஒன்றை ஊகித்துணரும் தன்மையையும், இம்மை - மறுமை பற்றிய சிந்தனையையும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் படைத்துள்ளான் அல்லாஹ்.
""அல்லாஹ் ஒருவன்; மனிதர்களை எதன் மீது இயற்கையாகப் படைத்தானோ, அத்தகைய அல்லாஹ்வின் இயற்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதன் மீதே மனிதர்களை இயற்கையாக அமைத்துள்ளான் (அல்குர் ஆன்: 30:30)''.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதாரம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த இறைவன் அதற்கான வழி வகைகளை அளித்துள்ளான். இறைவனின் சக்திக்கு ஏற்றபடிதான் மனிதனின் செயல்கள் உருவாகின்றன.
அல்லாஹ் மன்னிப்பவன் குர்ஆன் கூறும் பிராத்தனைகள்
بِـــــــــــــــــــــــسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பபம் செய்கின்றேன்.
நம்பிக்கை
கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்!
உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச்
சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த
நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ்
இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும் வலப்புறமும்
விரைந்து செல்லும். எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு
முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும்
ஆற்றலுடையவன்.(66:8)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
எங்கள் இறைவனே! எங்களுக்குஇ எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி
வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப்
பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8
رَبَّنَا
اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ
وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا
إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம்
கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும்
மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில்
வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க
இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். (59:10
رَبِّ
أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ
وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ
بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
என் இறைவனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! (27:19
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை
நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது
கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது
(நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம், நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (1:5-7)
رَبَّنَــــا تَقَبَّلْ مِـــنَّا اِنَّــكَ اَنْــتَ السَّمِيْعُ الْعَظِيْمُ وَتُبْ عَلَيْنَا اِنَّــكَ اَنْتَ التَّوَّابُ الــرَّحِيمُ.
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நீச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனும், அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நீச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவில்லா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.(2;127,128)
رَبَّــنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلاَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக.! (2:201)
رَبَّــنَا أفْرِغْ عَلَـــيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامِنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக.(2:250)
எங்கள் இறைவனே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக.(2:250)
سَمِعْنَــا وَأَطَعْنَــا غُفْـــرَانَكَ رَبَّـــنَا وَاِلَيْـــكَ الْمَصِــيْرُ.
எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளுவது உன்னிடமே தான். (2:285)
رَبَّــنَا لاَ تَزِغْ قُلُوْبَنَا بَعْدَ اذْ هَدَيْتَنــَا وَهَبْلَنَــا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّــابُ.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் எனும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!.(3:8)
எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம், எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக.(3:53)
رَبَّــنَا ظَلَمْنَــا أَنْفُسَنــَا وَاِنْ لَّمْ تَغْفِرْلَنَا وَتَرَحَمْنَا لَنَكُنَنَّ مِنَ الْخَــاسِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.(7:23)
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA.
Subscribe to:
Posts (Atom)