Powered By Blogger

Monday, December 17, 2012

இறைவன் அனைத்து படைப்பினங்களையும்விட மனிதர்களை மட்டுமே மிகச் சிறப்பாகப் படைத்துள்ளான்.

அதாவது, உலோக இனத்தைவிட தாவர இனம் சிறந்தது. தாவர இனத்தைவிட, அனைத்து உயிரினங்களும் சிறந்தவை. அனைத்து உயிரினங்களை விட, அல்லாஹ் மனிதர்களை மிக உயர்வாகவும், மிகச் சிறப்பாகவும் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட உயர்வுக்கு ஏற்றபடி மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிக்கும் நல்லறிவையும், ஆற்றலையும், ஒன்றை ஊகித்துணரும் தன்மையையும், இம்மை - மறுமை பற்றிய சிந்தனையையும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் படைத்துள்ளான் அல்லாஹ்.

""அல்லாஹ் ஒருவன்; மனிதர்களை எதன் மீது இயற்கையாகப் படைத்தானோ, அத்தகைய அல்லாஹ்வின் இயற்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதன் மீதே மனிதர்களை இயற்கையாக அமைத்துள்ளான் (அல்குர் ஆன்: 30:30)''.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதாரம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த இறைவன் அதற்கான வழி வகைகளை அளித்துள்ளான். இறைவனின் சக்திக்கு ஏற்றபடிதான் மனிதனின் செயல்கள் உருவாகின்றன.

No comments:

Post a Comment