بِـــــــــــــــــــــــسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பபம் செய்கின்றேன்.
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம், நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (1:5-7)
رَبَّنَــــا تَقَبَّلْ مِـــنَّا اِنَّــكَ اَنْــتَ السَّمِيْعُ الْعَظِيْمُ وَتُبْ عَلَيْنَا اِنَّــكَ اَنْتَ التَّوَّابُ الــرَّحِيمُ.
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நீச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனும், அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நீச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவில்லா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.(2;127,128)
رَبَّــنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلاَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக.! (2:201)
رَبَّــنَا أفْرِغْ عَلَـــيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامِنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக.(2:250)
எங்கள் இறைவனே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக.(2:250)
سَمِعْنَــا وَأَطَعْنَــا غُفْـــرَانَكَ رَبَّـــنَا وَاِلَيْـــكَ الْمَصِــيْرُ.
எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளுவது உன்னிடமே தான். (2:285)
رَبَّــنَا لاَ تَزِغْ قُلُوْبَنَا بَعْدَ اذْ هَدَيْتَنــَا وَهَبْلَنَــا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّــابُ.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் எனும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!.(3:8)
எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம், எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக.(3:53)
رَبَّــنَا ظَلَمْنَــا أَنْفُسَنــَا وَاِنْ لَّمْ تَغْفِرْلَنَا وَتَرَحَمْنَا لَنَكُنَنَّ مِنَ الْخَــاسِرِيْنَ.
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.(7:23)
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்,
SRI LANKA.
No comments:
Post a Comment