Powered By Blogger

Sunday, December 16, 2012

இவர்களே மனிதர்கள்.



மனிதன் என்ற சொல்லை மனம் நிறைந்த குணத்தால் வாழ்வதே மனிதன்.

அவனது சொல்,செயல், நடைமுறை தூய்மையானதாக இருக்க வேண்டும்.

எப்பொழுதும் நல்ல பேச்சையும், நல்ல செயல்களையும் செய்து வர வேண்டும்.

அவனது நடைமுறைகள் மற்றவர்களுக்கு ஒரு மிகப் பெரும் பாடமாக இருக்க வேண்டும்.

பிறக்கும் போது மனிதன் எதையும் கொண்டு வரவில்லை, அவன் வாழ்ந்து மரணிக்கும் போது அவனது நற்செயலைத் தவிர வேறு எதையும் அதன் கொண்டு போவதுமில்லை.

மனிதன் ஓடுவதில் பயனில்லை, அந்த ஓட்டத்தில் தாமதமும், அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குறுகிய நேரத்துக்குள் எடுத்து வைக்க வேண்டும்- காரணம் மரணம் என்ற பொக்கிஷம் வரக்கூடும்.

எல்லோரையும் நேசிப்பது ஏதோ கஸ்டம், இருந்தாலும் முயற்சிக்குப் பலன் உண்டு. பழகிப் பாருங்கள், பழகிக் கொள்ளுங்கள்.

எத்தனை முறை சிந்தித்தாலும் பலன் ஒன்றுதான் ஒரு முறை முடிவெடுங்கள்.

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
*_____________இவர்களே மனிதர்கள்________________*
*~~~~~~~~~~~~இதுவே என் தலைப்பு ~~~~~~~~~~~~~~~*

அஹமட் யஹ்யா.

ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
 

No comments:

Post a Comment